ஒருவேளை உன்னோடு
நான் இலலாமல் போனால்
கவலைப்படாதே என்பேன் அன்று
அப்போதெலாம் என் மனம் கல்லா
கவலைப்படாமல் இருக்க என்று
கண்ணீர் மழை பொழிவாய்
உன் மனம் கல்லாக இருந்திருந்தால்
சந்தோஷம் கொண்டிருப்பேனடி
ஆமாம்
சந்தோஷம் கொண்டிருப்பேன்
உன் மனம்
கல்லாக இருந்திருந்தால்
அதில் செதுக்கிய
என் நினைவுகளை உன்னால் அழித்திருக்க முடியாதல்லவா.?
No comments:
Post a Comment