அவள் மீது எந்த தவறும் இல்லை
எல்லாம் அந்த கடவுளின் தவறுதான்
ஆமாம்
எல்லாம் அந்த கடவுளின் தவறுதான்
ஏன் இப்படி செய்தான் அவன்?
அவளுக்கு கையளவும்
எனக்கு கடலளவும்
காதலை கொடுத்தது அந்த கடவளின் தவறுதான்
அவள் என்ன செய்வாள் பாவம்
கையளவு காதலை செலவழித்து முடித்துவிட்டாள் என்னில்.
கடலளவு காதலை நான் எப்படி செலவழிக்க.?
மீண்டும் சொல்கிறேன் நான்
அவள் மீது எந்த தவறும் இல்லை
காதலை சமபங்கிட தெரியாத
அந்த கடவுள் மீதுதான் தவறு...
கல்நெஞ்ச கடவுளே
என் கண்ணீர் பார்த்து கற்றுக்கொள்
பொன் பொருள் கொடுப்பதில் பேதம் காட்டு விட்டுவிடுகிறேன்
காதல் பேதம் காட்டி
கண்ணீர் சாபம் வாங்காதே
கல்நெஞ்ச கடவுளே
என் கண்ணீர் பார்த்து கற்றுக்கொள்
No comments:
Post a Comment