Saturday, 4 April 2015

என்னோடு மௌனம் ஏன்?

என்னோடு மௌனம் ஏன் என்னுயிர் தோழியே
ஊமைக்கும் மொழிகளுண்டு உனக்கொரு மொழியும் கிடையாதா?

மௌனமே உன் மொழியானால்
மரணம்தான் என் வ(லி)ழியாகும்

உன் மௌனத்தில் விஷம் வைத்து
என் மனதினை கொல்வதும் ஏனோ?

மௌனத்தின் தாழ்திறந்து உன் மனதினுள் அழைப்பாயா?
இல்லை மரணத்தின் வ(லி)ழிதந்து மன்னினுள் புதைப்பாயா?

உன் மௌனம் தரும் வலிகளெல்லாம் என் மனதோடு சேர்த்துவைப்பேன்
மரணமெனும் மருந்திட்டு ஒருநாள் வலியாற்றி உறங்கிடுவேன்

உன் மௌனம் உடையும் நேரம்
நான் மரண பயணம் சென்றிருப்பேன்

நீ பேச நினைக்கும் அந்நேரம்
உன் இதழ்கள் மொழிகள் உதிர்க்காது
உன் விழிகள் துளிகள் உதிர்த்திடுமே

No comments:

Post a Comment