Wednesday, 22 April 2015

பச்சோந்தி தனிமை

இந்த தனிமைக்குதான் எத்தனை கொடூர குணம்

அன்று
அவள் என்னோடு இருக்கையில்
மகிழ்ச்சியிலும் புன்னகையிலும் செய்த பூக்களை
என் கரம் தந்து சென்றது

இன்று
அவள் என்னோடு இல்லதாபோது
கவலையிலும் கண்ணீரிலும்
செய்த பூக்களை
என் கரம் தந்து செல்கிறது

இப்போதுதான் புரிகிறது
இந்த பச்சோந்தி தனிமையின் கொடூர குணம்
ஆம்
என் தனிமையும் இப்போது அவளோடு சேர்ந்துகொண்டு
என் கண்ணீர் பூக்கள் பறிக்கிறது....

No comments:

Post a Comment