எப்படி மறந்தாய்?
உன்னில் நானும்
என்னில் நீயும்
இருந்த நாட்களை..
எப்படி மறந்தாய்?
உனக்காக என் கண்களும்
எனக்காக உன் கண்களும்
அழுத கண்ணீர் துளிகளை
எப்படி மறந்தாய்?
உனக்காக என் இதயமும்
எனக்காக உன் இதயமும்
துடித்திட்ட நொடிகளை
எப்படி மறந்தாய்?
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வணங்கிய தெய்வங்களை
எப்படி மறந்தாய்?
உனக்காக நானும்
எனக்காக நீயும்
மாற்றிக்கொண்ட குணங்களை
எப்படி மறந்தாய்?
உன் கனவனாக நானும்
என் மனைவியாக நீயும்
வாழ்ந்திட்ட வருடங்களை
எப்படி மறந்தாய்?
உன் மணிக்கட்டில் நானும்
என் கன்னத்தில் நீயும்
இதழ்பதித்த முதல் முத்தங்களை
எப்படி மறந்தாய்?
நீ இல்லாத நொடிகளெல்லாம்
உன் நினைவால்
செத்துக்கொண்டிருப்பேன்
என தெரிந்தும்
எப்படி மறந்தாயடி என்னை
எப்படி மறந்தாய்.?.?.?
No comments:
Post a Comment