Friday, 10 April 2015

அவள் விட்டுச்சென்ற கைக்குட்டை

எதேச்சையாக விட்டுச்சென்றாளா
இல்லை
எனக்காகதான் விட்டுச்சென்றாளா?

மடிப்பு கலையாமல்
மனதோடு வைத்து பார்த்திருக்கிறேன்
அவள் விட்டுச்சென்ற வெள்ளைநிறக் கைக்குட்டையை

அழுகிறேன் இப்போது
அவள் கரமில்லை என் கண்துடைக்க

அவள் விட்டுச்சென்ற கைக்குட்டை
அவள் கரமாக கண்களில் தெரிந்தாலும்
கண்ணீர் துடைக்கமால்
கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்

கண்ணீர் துடைத்தால்
அதில் கலந்திருக்கும்
அவள் கைரேகை கலைந்துவிடும் என்பதால்..

No comments:

Post a Comment