கிளையுதிரும் சருகுகள்
கூடடையும் பறவைகள்
சிறு சிறு தூறல்கள்
மழை வரும் அறிகுறியால்
உன் பாதை விரைகிறாய்
மேகம் பூமியோடு முத்தமிடும்
சுகந்த மணம் கடத்தி வரும்
குளிர் காற்றின் கைப் பிடித்து
கூடவே வரும்
சர்பமொன்றின் வாயில் அகப்பட்ட
தவளையின் ஓலக் குரலை
கேட்டும் கேளாமல் போகிறாய் நீ
உனக்கொன்று தெரியுமா சகியே?
அது
உன் நினைவின் வாயில் அகப்பட்டு
மரண வலியில் கதறும்
என் உயிரின் ஓலக் குரலென்று
Friday, 14 April 2017
உயிரின் ஓலம்
Thursday, 6 April 2017
கனக்கும் கவிதை
என் கவிதைகளில்
இறக்கி வைக்கிறேன்
உன்
நினைவுகளின் பாரத்தை
இதோ
இப்போது
வலியோடு
கனத்து கிடக்கிறது
என் மனதை போலவே
உன் நினைவை சுமக்கும்
என் கவிதைகளும்...
Saturday, 1 April 2017
இது காதல் ஆயுதம்
விஷ்ணு சக்கரமெடுத்தான்
சிவன் சூலமெடுத்தான்
முருகன் வேலெடுத்தான்
அனுமன் கதையெடுத்தான்
ராமன் வில்லெடுத்தான்
நாத்திகன் நானோ
காதலை கடவுளென்றேன்
அதோ
அவள் நினைவெடுத்து வருகிறது...
Subscribe to:
Comments (Atom)