Friday, 14 April 2017

உயிரின் ஓலம்

கிளையுதிரும் சருகுகள்
கூடடையும் பறவைகள்
சிறு சிறு தூறல்கள்
மழை வரும் அறிகுறியால்
உன் பாதை விரைகிறாய்
மேகம் பூமியோடு முத்தமிடும்
சுகந்த மணம் கடத்தி வரும்
குளிர் காற்றின் கைப் பிடித்து
கூடவே வரும் 
சர்பமொன்றின் வாயில் அகப்பட்ட
தவளையின் ஓலக் குரலை
கேட்டும் கேளாமல் போகிறாய் நீ
உனக்கொன்று தெரியுமா சகியே?
அது
உன் நினைவின் வாயில் அகப்பட்டு
மரண வலியில் கதறும்
என் உயிரின் ஓலக் குரலென்று

No comments:

Post a Comment