கிளையுதிரும் சருகுகள்
கூடடையும் பறவைகள்
சிறு சிறு தூறல்கள்
மழை வரும் அறிகுறியால்
உன் பாதை விரைகிறாய்
மேகம் பூமியோடு முத்தமிடும்
சுகந்த மணம் கடத்தி வரும்
குளிர் காற்றின் கைப் பிடித்து
கூடவே வரும்
சர்பமொன்றின் வாயில் அகப்பட்ட
தவளையின் ஓலக் குரலை
கேட்டும் கேளாமல் போகிறாய் நீ
உனக்கொன்று தெரியுமா சகியே?
அது
உன் நினைவின் வாயில் அகப்பட்டு
மரண வலியில் கதறும்
என் உயிரின் ஓலக் குரலென்று
No comments:
Post a Comment