Saturday, 30 May 2015

பசிகொண்ட காதல்

எண்ணிப்பார்க்கிறேன் இப்போது
இந்தக் காதல்
இத்தனை செழிப்பாய்
இந்த உலகில்
எப்படி வளர்ந்ததென்று?

வளராதா பின்னே

என் கண்ணீரை உண்பதுபோல்
இன்னும் இவ்வுலகில்
எத்தனைப்பேரின் கண்ணீரை
உணவாய் உண்டு
உயிர் வாழ்கிறதோ?

ஓ காதலே..
வா...
இதோ
அவள் நினைவுகளை விறகாக்கி
என் நெஞ்சினை அடுப்பாக்கி
உனக்கான உணவை சமைத்து விட்டது
என் விழிகள்

நினைவுகள் தீர்ந்துப்போகாது
இதனால்தான்
நித்தமும் நீ செழிக்கிறாய் காதலே
நித்தமும் நீ செழிக்கிறாய்...

Wednesday, 27 May 2015

சிறகுதிர்ந்த பறவையாய்...

பறவையாக நானும்மாறி
அந்த வானம்தொட ஆசைக்கொண்டேன்
பூமியெங்கும் நான் பறந்து
புதுக்கவிதைப்பாட ஆசைக்கொண்டேன்

காதல் செய்தால் வானில் பறக்கலாம்
படித்ததோ கேட்டதோ நினைவிலில்லை ஆனால்
பறக்கும் ஆசையோ எனை விடவில்லை

எங்கிருந்தோ வந்தாளவள்
எனைக்கூட்டிச் சென்றாளவள்
காதல் சிறகை கட்டிவிட்டு
வானம் பறக்கச் செய்தாளவள்-என்
வாழ்க்கை மறக்க செய்தாளவள்

கனவுலகிலும் நனவுலகிலும் நான்
காதல் வானில் பறந்திருந்தேன்
காலை மாலை மறந்திருந்தேன்

என்னடி இது விளையாட்டு?
இதுதான் என் முதல்பாட்டு
பாடல்வரி அழிக்கின்றாய்-என்
சிறகிரண்டை முறிக்கின்றாய்

என் இதயத்தில் முளைத்திருந்த சிறகிரண்டை கேட்கின்றாள்
காற்றில் ஊதி விளையாட
காதல் சிறகை பிய்க்கின்றாள்

சிறகுதிர்ந்த பறவையாய் செத்து நான் போகாமல்
தினமுமவளை பாடுகின்றேன்
சிந்தையால் அவள் நினைவெழுதி
தினமுமவளை தேடுகின்றேன்

இறக்கும் தருவாயும்
என் இதயம் கேட்கும் உன் உறவைதானடி
இறகிரண்டை இழந்தாலும்
இப்போதும் நான் பறவைதானடி

ஆம்..
"சித்திரைக் குயிலாய்"
நித்திரையில்லாமல்
"உன் நினைவு கிளைகளில்"
இப்போதும் நான் பறவைதானடி...

Monday, 25 May 2015

இறக்கும் தருவாயிலும் நேசிக்கும் இதயம் மட்டும் காதலே வா...

மழையே மண் பொழி
மழையே மண் பொழி
மண்ணின் தாகம் தீருமட்டும்
மழையே மண் பொழி
அதிகம் பொழிந்து அனையுடைக்க பார்க்காதே...

காற்றே நீ வீசு
காற்றே நீ வீசு
ஐந்தறிவும் ஆறரிவும் சுவாசம் போதுமட்டும்
காற்றே நீ வீசு
கட்டவிழ்ந்து வீசி காடளிந்து போகாதே...

அலையே கரை வா
அலையே கரை வா
கால்தடம் திருடி களவுதொழில் செய்வதானால்
அலையே கரை வா
கரைதாண்டி நீயும் காலன் தொழில் செய்யாதே...

காதலே இதயம் வா
காதலே இதயம் வா
இறக்கும் தருவாயிலும் நேசிக்கும் இதயம் மட்டும்
காதலே இதயம் வா
இடையில் ஏமாற்றும் இதயம் நீ நுழைந்து
என்போல் கண்ணீர் இன்னொருவன் சிந்த பாக்காதே..

Friday, 22 May 2015

கண்ணீர்ப் பயணம்

அன்று..
நான்
கடல்மடித் தேடும் காட்டாறாய்...

நேற்று..
அவள்
தாகம் தீர்க்க வந்தவள்
தடுப்பனை கட்டிச் சென்றாள்...

இன்று..
நான்
பாதை தொலைத்தவனாய்
பயணம் முடிந்தவனாய்

இனி
கடல்மடித் தேடி
என் கண்ணீர் துளிகளின் பயணம்..

வாரி வாரி வழங்குகிறாள்

எத்தனை கருணை
என்மேல் அவளுக்கு
வாரி வாரி வழங்குகிறாள்
"வலிகளை"

Tuesday, 19 May 2015

உன் நினைவுப் பேரலையில்...

உறங்கி கிடக்கும் கைப்பேசி
உயிர்ப்பெற்று அழைத்தது..

ஆம்..
அழைத்தது அவள்தான்

அவள்..
என் உலகின் பெரும்பாதி
என் உயிரின் சரிபாதி

இப்போதே பார்க்க வேண்டும் உங்களை- இது அவள்

இப்போது எப்படி முடியும்?- இது நான்

இப்போது கடல் பொங்கியது அவள் கண்களில்

சொல்வதைக்கேள் அழக்கூடாது இப்போது
இப்போதல்ல எப்போதும்  என்னவள் அழக்கூடாது
நாளைப் பார்க்கலாம்- இது நான்

எப்போது விடியும் இந்த இரவு?
கதிரவனுக்கு முன்பே கண்விழித்து
இரவுக்கு விடைகொடுத்தோம்
அன்பின் முகம் காண..

இதோ..
அந்த அழகிய நாள்...

அதோ..
அவள் வருகிறாள்
மணற்காகிதத்தில் பாதத்தூரிகையால்
சுவடெனும் ஓவியம் வரைந்து
அவற்றை முத்தமிட்டு வாரிச்செல்ல
அலைகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்டிருந்தன..

விழியின் சாரல்கள்
விரலின் ஸ்பரிசங்கள்
இதழின் கூடல்கள்
எல்லாம் முடிந்து
தோள் சாய்ந்து கடல் பார்த்து
காதல் பேசிக்கொண்டிருந்தோம்
தென் தமிழெல்லையில்..

கதிரவன் மட்டும்
பொறாமைக் கண்ப்பார்த்து
இடம்மாறி நிழல்தேட
காதலின் கரம்பிரித்தான்
சிலஒரு நொடிகள்

அலைகள் அதன் தோழிகளோடு
ஒன்றன்பின் ஒன்றாக வந்து
என்தோள் சாய்ந்து கிடந்த
என்னவள் முகம்கண்டு
காதல் வாழ்த்துச் சொல்லி சென்றது

ஆழிப்பேரலை இப்போது நம்மை அள்ளிச்சென்றால்?
அவள் முகம்பார்த்து கேட்டேன்

சென்றால் என்ன.?
கனவன் மனைவி இருவரும் ஒன்றாக உயிர்ப்பிரிய
உலகில் கொடுத்து வைக்கவேண்டும்..
இது அவள் பதில்

இப்படியெல்லாம்
என்னை அன்பால் ஆட்சி செய்தவள் எங்கே சென்றாயடி நீ இப்போது
என் காதல் தேசம் விட்டு.?

இதோ

இன்று நான் மட்டும்
உன் நினைவுப் பேரலையில் சிக்கி
கண்ணீர் சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்...

Friday, 15 May 2015

இது காதல் பதியம்

அன்பெனும் செடியினை அவளாக வளைத்தெந்தன்
இதய குடுவையினில் பதியமும் போட்டுவைத்தாள்

காதல் பூ பூக்குமென்று கன்னியவள் சொன்னதினால்-தினம்
கனவினில் அவள்வர நான் உறக்கங்கள் விற்றிருத்தேன்

ஒட்டியிருக்கும் உயிரென்று உலகுமறந்து நானிருந்தேன்-ஆனால்
வெட்டினால்தான் பதியெமென்று வெட்டிப் பிரித்து எட்டிநின்றால்

வேர்விட்டால் வெட்டுவது பதியமென்று அறியாத
பாவியாக நான் இருந்தேன்
பாவை உனை நினைத்திருந்தேன்

அவள் செடியோ இன்றெல்லாம் அழகாய்தான் பூக்கிறது
ஆனால்..
காதல் வேர்விட்ட என் செடியோ?
கண்ணீராய் பூத்திடுதே
கவலையினில் வாடிடுதே....

Wednesday, 13 May 2015

என் கண்ணீர் என்பது யாதெனில்

அவள் நினைவுகளில்
வரிகள் வாங்கி
நித்தமும் எழுதி சாகும்
என் விழிகளின் கவிதை

தாகம் கொண்ட
என் தலையனைக்கு
இரவில் பொழியும்
என் விழிகளின் மழை

என் சொந்தங்களின்
மரிவுக்கு வரமறுத்த
அவள் பிரிவுக்கு வந்திருக்கும்
என் விழிகளின் தோழன்

யாருமற்ற நேரத்திலே
இடைவிடாது கதைப்பேச
எங்கிருந்தும் வந்திறங்கும்
என் விழிகளின் விருந்தாளி

அவளின் நினைவெனும் சொத்துக்களை
ஆயுள்வரை செலவழிக்க
இதயம் கொடுத்தனுப்பும்
என் விழிகளின் சில்லரைகள்

கடிணமான மொழி இதுதான் என்று
கற்கவில்லை நானும் இதை
அவள் பிரிவெனும் பாடத்தில்
நொடியினில் கற்றுக்கொண்ட
என் விழிகளின் மொழி

Tuesday, 12 May 2015

பாகப்பிரிவினை

யார்தான் பிரித்தார்கள்
இந்த பாகப்பிரிவினையை
இத்தனை ஓரவஞ்சனையோடு
அந்த கடவுள் பிரித்தானா?
இல்லை
அவள்தான் பிரித்தாளா?
ஆம்..
அவள் அன்பின்
ஒரு துளியைக் கூட
எனககு எழுதி வைக்கவில்லையே

உன் அன்பில் கொஞ்சம் தந்துவிடு

என் மனைவியாக நீயும் வந்தால்
எப்போதும் நான் கேட்பேன்
இடைவிடாது நான் கேட்பேன்
முப்பொழும் நான் கேட்பேன்
மூச்சுள்ளவரை நான் கேட்பேன்

வரதட்சனைக் கேட்டு கேட்டு
நச்சரிப்பேன் நான் தினமும்
என்று நான் சொல்லியதற்கா
பிரிந்து சென்றாய் பேதை நீயும்

அன்பெனும் வரதட்சனை உன்னிடம் இல்லையா
அதை நீதான் தர மறுக்க
அத்தனை ஏழையா?

தெரியாமல் சொல்லிவிட்டேன்
இனி தினமும் நான் கேட்கமாடேன்
உலகம் விட்டு செல்லும்முன்
ஒருமுறையேனும் வந்துவிடு
உன் அன்பில் கொஞ்சம் தந்துவிடு

அவள் எனக்கெழுதிய உயில்

நான் பேராசை கொள்ளாதவனென்று
உனக்கும் தெரியும்தானடி
தெரிந்தும் ஏன்
எனக்கே முழுவதும்
எழுதி வைத்துச் சென்றுவிட்டாய்
உன்
நினைவெனும் சொத்துக்களை உயிலாக...

Sunday, 10 May 2015

இதயமேற்றி எனை சுமந்தவள்

எத்தனை மைல் தூரமென்றாலும்
இடுப்பேற்றி எனை சுமந்த -என்
பெரியாத்தா இறந்ததற்கே பெருங்கண்ணீர் கொள்ளவில்லை
பேதை நீ பிரிந்ததற்கு- என் விழிகள் பேய்மழையாய் கொடடுதடி

இதயமேற்றி எனை சுமந்து இறக்கிவிட்டு சென்றதாலோ
இவளின்றி என்னுலகம் இயங்காது என்பதாலோ

எதற்கும் அழமாட்டேனென்று வீரம் பேசிய
என் விழிகள் இன்று
கள்ளி உன் கபடத்தால் கண்ணீர்விட்டு கதறுதடி
கவலை என்னை கொல்லுதடி

Saturday, 9 May 2015

காதல் பகடை

காதல் பகடையாட கைப்பிடித்து எனையழைத்தாய்
விளையாட தெரியாதென்றேன் விட்டு நீயும் செல்லவில்லை
எனக்காக நீ ஆடி ஏணியேற்றி விட்டாயடி
வெற்றி தொடும் வேளையிலே ஏணியிடறி விட்டாயடி
எனை தீண்டி சென்றாயடி

கருநாகம் தீண்டினாலும் காளை நான் கலங்க மாட்டேன்
காதல் நாகம் நீ தீண்டி
கவலைகள் கொல்லுதடி
கண்ணீரும் கொட்டுதடி

அன்பெனும் நஞ்சினை நெஞ்சினில் தெளித்துவிட்டாய்
நித்தமும் சாகிறேன் நீயெங்கே சென்றுவிட்டாய்
உனக்கில்லா இரக்கம் நஞ்சுக்கென்ன வந்ததடி
உடனே உயிர்கொல்ல அதுவும் மறுக்குதடி

ஆலகால விஷமுண்ட ஆண்டவனே கேட்கிறேன்
நீயுண்ட நேரத்திலே காதலி கண்பார்த்தாள்
கழுத்தோடு நிறுத்திவிட்டாள்

அன்பெனும் நஞ்சினால் என்னவள் தீண்டிவிட்டாள்
இவள் தீண்டிய நஞ்செந்தன் இதயத்திலும் இறங்கியதே
இதற்கேதும் மருந்துண்டோ -என்
இன்னல் தீர வழியுண்டோ.?

Friday, 8 May 2015

அவளின் காதல்

பாதி வழியில்
பாதை மறந்த
புனித யாத்திரை

என் உயிர்மரம் பட்டுப்போக
அன்பெனும் கோப்பையால்
அவள் ஊற்றிய அமிலம்

ஹம்பர்க்கின் தலைநகரில் அச்சிடப்பட்ட
நாள்தோறும் நான் படித்த
காதல் நாளிதழ்

கின்னஸில் இடம்பெறலாம்
இது நான்காண்டு நான் கண்ட
மிக நீளக் கனவு

முப்போகம் விளையும்
என் கண்ணீர் வயலுக்கு
அவள் வித்திட்ட விதை

என் மரணமெனும் கவிதைக்கு
அன்போடு அவள் போட்ட
பிள்ளையார் சுழி

எப்போதும் என் விழிகலங்க
தூசியள்ளி வீசிச்சென்ற
காதல் புயல்

நீந்த தெரியாத
என் கடல் பயணத்திற்கு
கனிவோடு அவள் தந்த
துடுப்பில்லா படகு

வறன்ட தேசத்தில்
வரமறுக்கும் மழை
வளமான தேசத்தில்
வந்தழிக்கும் மழை

தவமிருந்து வரம்பெற
கடவுள் வரும் நேரத்தில்
இமைதிறந்த என் விழியின்
ஓளிபறித்த மின்னல்

அவள் நினைவால்
அனுதினம் நான் சாக
அவளாக தந்துச்சென்ற
வரம் வரம் வரம்...

Thursday, 7 May 2015

படைத்தல் காத்தல் அழித்தல்

படைத்தல் பிரம்மனாம்
காத்தல் விஷ்ணுவாம்
அழித்தல் ஈசனாம்
இதுதான் இவர்களுக்கு தொழிலாம்

ஏனோ படைத்துவிட்டான் எனைதான் பிரம்மனும்
இதுவரை காத்துவிட்டான் இரக்கமுள்ள விஷ்ணுவும்

இனியென்ன?
ஈசனின் அழித்தல்
அவன்தொழில் என்னில்

இதோ
ஈசன் அவனும் எழுதப் போகிறான்
என் மரணமெனும் கவிதையை மண்ணில்
என் இதயம் முழுவதும் வலியிட்டு
அவளின் காதெலனும்
பிள்ளையார் சுழியிட்டு...

ஈசனே என்ன இது?

அழிப்பது உன் தொழில்தான்
அறிவேனே நானும்தான்
உன்தொழிலை மதிக்கிறேன்
உடன்படவும் செய்கிறேன்

எந்த ஆயுதத்தால்
எனையழிக்க போகிறாயோ என்றென்னி காத்திருந்தேன்
நீ கொண்டு வந்த ஆயுதம் கண்டு குலைநடுங்கி போனேனடா

அழிக்கும் ஆயுதங்களை அப்படியெங்கே தொலைத்தாய் நீ
அவளின் நினைவெனும் ஆயுதத்தால் எனை அழிக்க நினைக்கிறாயே

முக்கண் திறந்து சாம்பலாக்கு காற்றில் கலந்து விடுகிறேன்
ஆழியின் ஆழத்தில் அமிழ்த்திவிடு அங்கேயே மூழ்கிப்போகிறேன்
இல்லையேல்
என் கழுத்துப் பிடித்தேனும் கைநெறி
கண்மூடி என் காலம் முடிக்கிறேன்

அழிக்கும் ஆயுதங்களை அப்படியெங்கே தொலைத்தாய் நீ
அவளின் நினைவெனும் ஆயுதத்தால் எனை அழிக்க நினைக்கிறாயே...

நீ எழுதிய கவிதை

மேகம் எழுதிய கவிதை மழையானது

காற்று எழுதிய கவிதை தென்றலானது

சிற்பி எழுதிய கவிதை சிலையானது

தூரிகை எழுதிய கவிதை ஓவியமானது

நிலவு எழுதிய கவிதை பௌர்ணமியானது

கண்கள் எழுதிய கவிதை காதலானது

.
.
.
.

நான் எழுதிய கவிதை
காகிதம் கணமானது

நீ எழுதிய கவிதை
என் இதயம் ரணமானது

Monday, 4 May 2015

பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்

பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்
ஆமாம்
பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்

இமைகளை பிரிந்தால்தான் விழிகள் பார்க்க முடியும்

சிறகுகளை பிரிந்தால்தான் பறவை பறக்க முடியும்

செடிகளை பிரிந்தால்தான் மலர்கள் மாலையாக முடியும

மேகத்தை பிரிந்தால்தான் மழை மண்சேர முடியும்

கிளைகளை பிரிந்தால்தான் காற்றை சுவாசிக்க முடியும்

இதழ்களை பிரிந்தால்தான் மௌனத்தின் விரதம் முடியும்

ஓ...
அவள் என்னை பிரிந்ததால்தான்
இந்த கவிதையோ.?

Saturday, 2 May 2015

ஏன் இந்த முரண்பாடு?

பதிவேற்றம் செய்த ஓன்றைதானே
பதிவிறக்கமும் செய்ய முடியும்?

பின்னர் ஏன் இந்த முரண்பாடு?

குழப்பமாக உள்ளது எனக்கு
இங்கே பாருங்கள்

என் இதயதளத்தில்
பதிவேற்றம் செய்ததென்னவோ
அவளின் நினைவுகளைதான்
ஆனால் இப்போதோ
கண்ணீர் துளிகளை
பதிவிறக்கம் செய்கிறேன்...

வரம்தரும் கடவுளே வருவாயா?

தவம்பல புரிந்து வரம்பல பெற்றனர் முன்னோரெலாம்
நானும் புரிகிறேன் தவமொன்று
கடவுளை கேட்கிறேன் வரமொன்று

என் தவம் யாதென்று யார்தான் அறிவார்?
உன்மனம் அறியும் அதை ஊர்தான் அறியாதடி

வரம்தரும் கடவுள் யார் இங்கே?
கடவுள் இருந்தாலும் கலியுகம் வருமா? வரமும் தருமா?
உனைநான் கடவுளென்றேன் ஒளிந்துகொண்டாய் ஓடிச்சென்று

உன் நினைவுகளை சிதையாய் மூட்டி
என் நெஞ்சதனை நினைவில் வாட்டி
நெடுந்தவம் புரிகிறேன் நித்தமும்

என்தவம் கண்டு கொடுந்தவமும் குலைநடுங்குமடி
உன்மனம் ஏனடி குழையவில்லை இன்னும்

கலியுகம் வரமாட்டோம் என்ற கட்டுபாட்டை கொஞ்சம் மீறி
வரம்தரும் ஈசனே வருவாயா எனக்காக?

உன் தலை கைவைத்து
உனையே சோதிக்கும் வரம்
கேட்க நான் மாட்டேன்
வந்துவிடு ஈசனே தைரியமாக
தந்துவிடு வரமும் எனக்காக

என்னை கருவாக உருமாற்றி
அவள் மடியில் பிறக்க செய்
இல்லை அவள் கையால் என்னுயிரை
இச்ஜென்மம் இறக்க செய்
நான் கேட்கும் வரமெலாம் இதுதான்

துனையாக வேண்டாமென தூக்கியெறிந்து சென்றவள்
மழலையாக அவள்மடி பிறந்தால்
அன்பால் அரவனை கொள்வாளா.?
இல்லை
அப்போதும்
அனாதையாய் விட்டுச் செல்வாளா.?

Friday, 1 May 2015

உன் நினைவெனும் ஆயுள்ரேகை...

கைரேகை பார்த்தேன் நேற்று
ஆயுள் தீர்க்கமாம்
ஜோதிடர் சொல்கிறார்...
ஆமாம்
தீர்க்கமாகதான் உள்ளது என்னில்
உயிரோடு எனை கொல்லும்
உன் நினைவெனும் ஆயுள்ரேகை...