Wednesday, 13 May 2015

என் கண்ணீர் என்பது யாதெனில்

அவள் நினைவுகளில்
வரிகள் வாங்கி
நித்தமும் எழுதி சாகும்
என் விழிகளின் கவிதை

தாகம் கொண்ட
என் தலையனைக்கு
இரவில் பொழியும்
என் விழிகளின் மழை

என் சொந்தங்களின்
மரிவுக்கு வரமறுத்த
அவள் பிரிவுக்கு வந்திருக்கும்
என் விழிகளின் தோழன்

யாருமற்ற நேரத்திலே
இடைவிடாது கதைப்பேச
எங்கிருந்தும் வந்திறங்கும்
என் விழிகளின் விருந்தாளி

அவளின் நினைவெனும் சொத்துக்களை
ஆயுள்வரை செலவழிக்க
இதயம் கொடுத்தனுப்பும்
என் விழிகளின் சில்லரைகள்

கடிணமான மொழி இதுதான் என்று
கற்கவில்லை நானும் இதை
அவள் பிரிவெனும் பாடத்தில்
நொடியினில் கற்றுக்கொண்ட
என் விழிகளின் மொழி

No comments:

Post a Comment