கடைசி பேருந்து வரை
காத்திருந்து விட்டுதான் வருகிறேன்
ஒவ்வொரு நாள் முடிவிலும்
என்றாவது வந்து விடாதா?
'தொலைந்து போன உன் காதல்'
கடைசி பேருந்து வரை
காத்திருந்து விட்டுதான் வருகிறேன்
ஒவ்வொரு நாள் முடிவிலும்
என்றாவது வந்து விடாதா?
'தொலைந்து போன உன் காதல்'
சிறு மழலையின் தீண்டல்
துளி மழையின் தீண்டல்
ஒரு மலரின் தீண்டல்
ஞாபகப்படுத்தி விடுகிறது
உன் முத்த ஸ்பரிசங்களை
என்னை ஞாபகப்படுத்ததான் எதுவுமில்லை
இயல்பாய் சுற்றும் உன் பூமியில்
சரி
ஒன்று மட்டும் சொல்லடி சகியே
என் ஞாபகங்களையெல்லாம் மூட்டைக்கட்டி
எந்த சமுத்திரத்தில் எறிந்தாய்...?
தேன் சொட்ட தந்த
தெவிட்டாத முத்தங்களெல்லாம்
தீர்ந்து போன ஓர் நாளில்
மறக்கச் சொல்லி சென்றாய்
ஆனாலும் சகியே
முத்த தினமெல்லாம்
முடிந்துபோன பின்பும்
முடிந்தபாடில்லை
முடிந்துபோன காதலின் கருணை
ஆமாம்.. இதோ..
நினைவின் இதழேறி வரும்
நின் முத்தங்களெல்லாம்
நெஞ்சமெங்கும் தடம் பதிக்கிறது
இப்போது
அமிலம் பட்டதாய் அலறித் துடிக்கும்
அன்பால் சாகும் உயிரின் சத்தம்
காற்றின் சிறகேறி வருகிறது
"கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே"
எப்படியாவது தூங்கிவிட வேண்டும்
உன்னை நினைக்காமல் இன்றிரவு
ஆமாம்
சபதம் எடுத்துக் கொண்டேன்
பண்பலை பாடல்கள் தாலாட்டிக் கொண்டிருந்தது
இமைகள் இறுகத் துவங்கிய வேளை
உயிருக்குள் ஒலிக்கத் துவங்கியது
உனைப் பாடச் சொல்லிக் கேட்ட
"ஊருசனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சி"
இசைஞானி மெல்லிசை மன்னரோடு
இப்போது
கூட்டனி சேர்ந்திருந்தது உன் நினைவுகளும்
என் இரவைக் கூறு போட....