எங்கே தொலைத்தாய்..?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்
எங்கே தொலைத்தாயடி உன் இரக்கத்தை
என் உறக்கமது தொலைந்ததும் அங்கேதான்
ஆமாம்..
அதனால்தான் கேட்கிறேன்..
எங்கே தொலைத்தாய்?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்
"நான் உறங்க வேண்டும் காதலி"
Thursday, 5 November 2015
நான் உறங்க வேண்டும் காதலி
Wednesday, 4 November 2015
கடையேழு வள்ளல்களின் வாரிசு அவள்
பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தானாம்
பாரி முல்லைக்குத் தேர் தந்தானாம்
அதிகன் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தானாம்
அடிப்போடி..
அப்படியொன்றும் பெரிய வள்ளல்களில்லை அவர்கள்
ஆமாம்
உன்னை விடவா உலகில்
உயரந்த வள்ளல்கள் இருக்கப் போகிறார்கள்?
ஆயுளுக்கும் அழுவதற்கு தந்துள்ளாயே
தானமாக உன் நினைவுகளை...
Subscribe to:
Comments (Atom)