Friday, 7 July 2017

என் இரவைக் கூறு போட

எப்படியாவது தூங்கிவிட வேண்டும்
உன்னை நினைக்காமல் இன்றிரவு
ஆமாம்
சபதம் எடுத்துக் கொண்டேன்
பண்பலை பாடல்கள் தாலாட்டிக் கொண்டிருந்தது
இமைகள் இறுகத் துவங்கிய வேளை
உயிருக்குள் ஒலிக்கத் துவங்கியது
உனைப் பாடச் சொல்லிக் கேட்ட
"ஊருசனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சி"
இசைஞானி மெல்லிசை மன்னரோடு
இப்போது
கூட்டனி சேர்ந்திருந்தது உன் நினைவுகளும்
என் இரவைக் கூறு போட....

No comments:

Post a Comment