Thursday, 29 June 2017

உன் நினைவின் சாரல்

காற்றின் முதுகில் பயணித்து வரும்
மேற்கு தொடர்ச்சி மலையின் சாரல்
என் சன்னல் வழி நுழைந்து
உறங்கிக் கொண்டிருந்த
உன் நினைவுகளின் முகத்தில்
நீரையள்ளித் தெளித்துப் போகிறது
விழித்த நினைவுகளோ
வேலையை காட்டுகிறது இப்போது
ஆம் சகியே...
காற்றலையில் மிதக்க விட்டுப் போன
உன் காதல் சொற்களெல்லாம்
இதோ
என் உயிர் கூட்டில் எதிரொலிக்கிறது
"மழை பெய்யும் போது
சன்னலை சாத்திட்டு தூங்குங்க" என்று
இனி
இந்த இரவு முழுவதும்
உன் நினைவின் சாரலையெல்லாம்
கனமழையாய் கொட்டித் தீர்க்க கூடும் 
விழித்துக் கிடக்கும் என் விழிகள்

No comments:

Post a Comment