Monday, 4 May 2015

பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்

பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்
ஆமாம்
பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்

இமைகளை பிரிந்தால்தான் விழிகள் பார்க்க முடியும்

சிறகுகளை பிரிந்தால்தான் பறவை பறக்க முடியும்

செடிகளை பிரிந்தால்தான் மலர்கள் மாலையாக முடியும

மேகத்தை பிரிந்தால்தான் மழை மண்சேர முடியும்

கிளைகளை பிரிந்தால்தான் காற்றை சுவாசிக்க முடியும்

இதழ்களை பிரிந்தால்தான் மௌனத்தின் விரதம் முடியும்

ஓ...
அவள் என்னை பிரிந்ததால்தான்
இந்த கவிதையோ.?

No comments:

Post a Comment