Friday, 3 April 2015

கல்லரைத் தூக்கம் தந்துவிடு

ராவண தம்பியே
ராத்தூக்கம் எனக்கில்லை
என்ன மாத்திரை நீ எடுத்தாய்
எப்போதும் நீ தூங்க
நினைவெனும் மாத்திரை தந்து
என் நித்திரை பறித்து ஓடிவிட்டாள்
கண் தூக்கம் எனக்கில்லை
அந்த கடவுளுக்கும் கண்ணில்லை
இரண்டுபட்ட இதயத்திற்கு துடிப்பெதற்கு
இமைக்காத கண்களுக்கு இமைகளெதற்கு
கடவுளே கடவுளே உன் கால்பிடித்து கெஞ்சுகிறேன்
உறங்கா தவம்புரிந்து வரமொன்று கேட்கின்றேன்
கண்தூக்கம் கூட தரவேண்டாம்
எனக்கு நீ
கல்லரைத் தூக்கம் தந்துவிடு...

No comments:

Post a Comment