ராவண தம்பியே
ராத்தூக்கம் எனக்கில்லை
என்ன மாத்திரை நீ எடுத்தாய்
எப்போதும் நீ தூங்க
நினைவெனும் மாத்திரை தந்து
என் நித்திரை பறித்து ஓடிவிட்டாள்
கண் தூக்கம் எனக்கில்லை
அந்த கடவுளுக்கும் கண்ணில்லை
இரண்டுபட்ட இதயத்திற்கு துடிப்பெதற்கு
இமைக்காத கண்களுக்கு இமைகளெதற்கு
கடவுளே கடவுளே உன் கால்பிடித்து கெஞ்சுகிறேன்
உறங்கா தவம்புரிந்து வரமொன்று கேட்கின்றேன்
கண்தூக்கம் கூட தரவேண்டாம்
எனக்கு நீ
கல்லரைத் தூக்கம் தந்துவிடு...
Friday, 3 April 2015
கல்லரைத் தூக்கம் தந்துவிடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment