அவள் ஒரு மந்திரகாரி
ஆமாம்
அவள் ஒரு மந்திரகாரி
அவளை
எனது இரண்டாம் தாய் என்றேன்
அதற்காக இப்படியா..?
தாயென்றதற்காக
சிசுவாக மாற்றிவிட்டாள் என்னை.
காதல் கருவில் இப்போது நான்.
ஆம்
காதல் கருவில்
இப்போது நான்
அவளின்
நினைவெனும் தொப்புள்கொடியால்
உயிர்க்காற்றை சுவாசிக்கிறேன்...
No comments:
Post a Comment