கடல் இல்லையென்றால்
அலைகள் இல்லை
கண் இல்லையென்றால்
பார்வை இல்லை
சிற்பி இல்லையென்றால்
சிலைகள் இல்லை
சிந்தனை இல்லையென்றால்
தெளிவு இல்லை
அன்னை இல்லையென்றால்
பிறப்பு இல்லை
அன்பு இல்லையென்றால்
மகிழ்ச்சி இல்லை
நீர் இல்லையென்றால்
உயிர்கள் இல்லை
நீ இல்லையென்றால்
நான் இல்லை
உன் நினைவுகள் இல்லையென்றால்
என் உயிர் இல்லை...
No comments:
Post a Comment