நான்கு பத்து மாதங்கள்
நான் உங்கள் உயிர்
நீங்கள் என் உயிர்
என்று உயிர்மொழியால் உருகியவள்
இப்போது
என்மேல் பாசமிருந்தாள்
மூன்று வேளை சாப்பிடுங்கள்
எதற்கும் கவலைப்படாதீர்கள்
கவணமாக இருங்கள்
என்னை மறந்துவிடுங்கள்
என்றுரைக்கிறாள்
எல்லாம் உரைத்துச் சென்றவளே
ஒன்றை மறந்துவிட்டாயடி
ஆம் ஒன்றை மறந்துவிட்டாய் நீ
வா..
வந்து உரைத்துச்செல் எனக்கு
உன்னை
எப்படி மறக்கவேண்டும் என்று...
No comments:
Post a Comment