Wednesday, 1 April 2015

வரமா? சாபமா?

வரமா சாபமா உன் நினைவுகள்?
சாபம்தானடி உன் நினைவுகள்
ஆம்
உன் நினைவுகள்
என் கண்ணீர் பார்த்து கைத்தட்டுகிறது
இதயம் கிள்ளி வலி பார்க்கிறது
உறக்கம் பறித்து ஒழித்து வைக்கிறது
துயர் கொடுத்து தூளி ஆடுகிறது

இல்லை.. இல்லை..
வரங்கள்தான் உன் நினைவுகள்

ஆம் எத்தனை துயர்க்கொடுத்தாலும் உன் நினைவுகள் உன்னைப்போல் இல்லையடி என்னை பாதியில் விட்டுச்செல்ல
என் மரணம் வரை என்னைப் பிரியாமல்
என் கண்ணீரை காதலிக்கும்
உன் நினைவுகள் ஒவ்வொன்றும் வரம்தான்...

No comments:

Post a Comment