Monday, 23 March 2015

கவிதைகள்

கவிதை
இது எப்போது வருமென்று தெரியாத
என் எழுதாத பக்கங்களின் விருந்தாளிகள்..

கவிதை
இது அவள் வரும் கனவுகளின் மொழிபெயர்ப்புகள்..

கவிதை
இது அவள் என்னில் விட்டுச்சென்ற நினைவுகளின் நிஜங்கள்..

கவிதை
இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின்
கண்ணீர் அறுவடை..

கவிதை
இது அவள் நினைவால்
என் பேனா விடும் கண்ணீர்..


No comments:

Post a Comment