அது ஒரு மழை இரவு
ஜன்னல் வழி வரும் சாரலின் குளிர் குத்தூசியாய் உடல் குத்திச்சென்றது
கைப்பேசியில் காதல் மொழி பேசிக்கொண்டிருந்தாள் என்னவள்
ஜன்னலை பூட்டிக்கொள்ளுங்கள்
போர்வையால் போர்த்திக்கொள்ளுங்கள்
அவளின் அக்கறைப்பேச்சு இது.
ம்ம்.. ஆனாலும் குளிர்கிறதே - இது நான்
அப்படியென்றால் அனைத்துக்கொள்ளுங்கள் என்னை-இது அவள்
மழைக்கு குளிரெடுத்தது இப்போது
எத்தனை காதலடி என்மேல் அன்றுனக்கு..
இப்போதும் மழை பொழிகிறது
என் இரவுகளில்
ஆனால்
ஏனோ குளிரவில்லை இன்றெனக்கு கண்ணீர் மழை....
No comments:
Post a Comment