Monday, 30 March 2015

உன் அன்பைக் கேட்டு

வானவில் வளைந்து கெஞ்சுகிறது
உன் வண்ணம் கேட்டு

வெண்ணிலா தேய்ந்து செல்கிறது
உன் முகசாயல் கேட்டு

மலர்கள் வாடி உதிர்கின்றது
உன்போல் மணம் கேட்டு

மேகம் அழுது பொழிகின்றது
உன் குழலாய் மாற கேட்டு

விண்மீன்கள் உருகி வீழ்கின்றது
உன் விழிபோல் ஒளி கேட்டு

இவற்றையெல்லாம் போல் நானும்
கெஞ்சியும்
தேய்ந்தும்
வாடியும்
அழுதும்
உருகியும் கேட்கிறேன்
உன் அன்பை...

1 comment: