மழலை பிடிக்கும் மலர்கள் பிடிக்கும் என்றே
மங்கையவள் உரைக்கின்றாள் பிடிப்பன எல்லாம்
பிடிக்கும் வண்ணமென்னவோ பிரியமானவளுக்கு என்றேன்
பிடித்த வண்ணம் ஸ்கை ப்ளூ என்கிறாள்
அப்படியென்றால் ஆங்கிலம் அறியாதவனாய் நான்
அப்படியென்றால் வான ஊதா லூசு லூசு
தமிழ் விளக்கம் தந்தவள்-என்
தலையில் குட்டும் வைக்கிறாள்
காலங்களின் கால்கள் ஓடிய வேளையில்
காதலின் மனமும் மாறிச் செல்கிறாள் . .
இதோ
என் தனிமையோடு போட்டிப் போட்டு தவழ்ந்து செல்லும் நிலா
என் கண்ணீரோடு போட்டிப் போட்டு கலைந்து செல்லும் மேகங்கள்
என் அன்பினோடு போட்டிப் போட்டு அனைந்து போகும் விண்மீன்கள்
இவற்றை விடுத்து ரசிக்கின்றேன்
என் தனிமையின் வானில்
"ஸ்கை ப்ளூ"வை
எல்லாம் விட இவ்வுலகில்
"என்னைப் பிடிக்கும் என்றவளின் நினைவோடு"
No comments:
Post a Comment