கண்ணாடி பார்க்கும் போதெல்லாம்
கண்ணீர் வருகிறது..
எத்தனை நரைமுடிகள் இளநரையாய் என்னில்?
இதற்காகவா கண்ணீர்?
இல்லை இல்லை
பின் ஏன் இந்த கண்ணீர்.?
மழலையாக அவள் மடியில்-நான்
மஞ்சம் கொண்ட ஒரு நொடியில்
வியர்வை நனைத்த முடிகளை
விரலால் கோதி சொல்லுகிறாள்...
"நாளை நம் பிள்ளை தங்களை
அப்பா என்று அழைக்காது
தாத்தா என்று அழைக்குமென்று"
இது
மங்கையவள் உரைத்த மொழி
இன்றோ
என் மனம் முழுதும்
"காதல் வலி"
No comments:
Post a Comment