Wednesday, 25 January 2017

சொல்லடி சகியே

காதல் உரமிட்டு
செழிப்பாய்தான் வளர்திருந்தாய்
பச்சைப் பசேலென
என் வாழ்க்கைச் சமவெளியை
இதோ
நீயற்ற பொழுதுகளில்
உன் நினைவின் பற்களுக்கு
கொஞ்சம் கொஞ்சமாய் இரையாகும்
என் உயிரின் அழுகுரல்
கொஞ்சம் சன்னமாகவாவது கேட்கிறதா உனக்கு?

No comments:

Post a Comment