யாரோ ஒருவர் கையைப் பிடித்து நடக்கும்
கோவில் திருவிழாவில்
வழி தப்பிய சிறுவனாய்
உன் நினைவுகளை பிடித்துக் கொண்டு
காதல் திருவிழாவில் தொலைந்த நான்
காதல் கோவிலின் வாசல் அது
கை நீட்டுகிறேன் உன்னிடம்
யாசிக்கும் ஏழையாய் நான்
காணிக்கையிட்டு போகிறாய்
வாரி வழங்கும் வள்ளலாய் நீ
நிறைய நிறையவே நினைவுகளை
சவம் என்னா கனம் கனக்கு
தூக்குபவர்கள் சொல்வார்கள் கண்டிப்பாக
நாளை நான் செத்தப் பிறகு
ஆமாம்
ஜென்மத்துக்கும் சேர்த்து வைத்த
உன் நினைவின் கனமும் என்னோடல்லவா
எல்லோரும் சொல்கிறார்கள்
பித்து நிலையில் இருப்பதாக என்னை
அவர்களுக்கெப்படி தெரியும்
உன்னையே நினைத்து உன்னையே உளரும் நான்
முக்தி நிலையில் இருப்பது
ஜன்னலோர பயணியாய் நான்
அதோ கை வீசி வருகிறது
உன் நினைவுகள்
கண்ணீர் வரவழைக்கும் காற்றாக
அதனாலென்ன
ஜன்னலோர பயணமே இரசிக்கதானே
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு கிளியிடமெல்லாம் இல்லை
என்னை மறந்து விடுங்கள் என்ற
உன் ஒற்றை வார்த்தையில்தான்
கொஞ்சம் கொஞ்சமாய் போய்க் கொண்டிருக்கிறது
இந்த காதல் ராஜாவின் உயிர்
No comments:
Post a Comment