Thursday, 2 February 2017

நினைவு சர்பங்கள்

முதுகுத்தண்டில் ஊர்ந்து
மூளையில் நின்றாடி
நாடி நரம்புகளில் நகர்ந்து
இதயத்தில் இறங்கி
இறுகிப் பிணைந்து
உயிர்த் தீண்டிப் போகிறது
உன் நினைவு சர்பங்கள்
இதோ
இன்றைய விடியலிலும்
வானம் வெறித்து
வாயில் நுரைத் தள்ளி
இறந்து கிடக்கிறது
என் துயிலா இரவுகள்...

No comments:

Post a Comment