முதுகுத்தண்டில் ஊர்ந்து
மூளையில் நின்றாடி
நாடி நரம்புகளில் நகர்ந்து
இதயத்தில் இறங்கி
இறுகிப் பிணைந்து
உயிர்த் தீண்டிப் போகிறது
உன் நினைவு சர்பங்கள்
இதோ
இன்றைய விடியலிலும்
வானம் வெறித்து
வாயில் நுரைத் தள்ளி
இறந்து கிடக்கிறது
என் துயிலா இரவுகள்...
No comments:
Post a Comment