Wednesday, 28 December 2016

காத்திருக்கும் என் கனவுகள்

நேற்று இரவு அவள் வந்திருந்தாள்
"என்னை மறந்து விடுங்கள்"
என்று சொல்லி விட்டு
இன்னொருவனை மணம் முடித்துச் சென்றவள்
அவள் அப்படியேதான் இருந்தாள்
இல்லை.. இல்லை..
கொஞ்சம் சதைப் போட்டிருந்தாள் 
"எப்படி இருக்குறீங்க"
நலம் விசாரித்தவள் பின்பு
ஒழுங்கா நேரத்துக்கு சாட்டுங்க
எதுக்கும் கவலை படாதீங்க
யார் மேலையும் கோப படாதீங்க என்று
தினமும் முன்பு  பாடும்
பழைய பல்லவியை பாடினாள்
சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள் 
நேரம் ஓடிய வேளையில்
விடைபெற கையசைத்தவளை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் 
இதோ
இரவாக தொடங்கி விட்டது
நேற்றைப் போல் வந்து விடுவாள்
இன்று இரவும்
காத்திருக்கும் என் கனவுகளில்...

No comments:

Post a Comment