இறந்தபின் எவரேனும் உயிர்வாழ முடியுமா?
மானிட வாழ்வில் இது சாத்தியமா?
சாத்தியம்தான்..
இதோ நான் வாழ்கிறேனே
அவள்
என்னை மறந்துவிடுங்கள் என்று சொல்லிய
அன்றுதான் நான் இறந்தேன்
ஆமாம்
அன்றுதான் நான் இறந்தேன்..
இறந்தும் உயிர்வாழ்கிறேன் அதிசயம்தான்..
இருமுறை இறக்கும் அதிசயமும்
என்னால்தான் நிகழப்போகிறது இவ்வுலகில்
ஆம்..
அவள் நினைவுகளோடு
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
என் இரண்டாம் மரணம் நோக்கி...
No comments:
Post a Comment