நேற்று இரவு அவள் வந்திருந்தாள்
"என்னை மறந்து விடுங்கள்"
என்று சொல்லி விட்டு
இன்னொருவனை மணம் முடித்துச் சென்றவள்
அவள் அப்படியேதான் இருந்தாள்
இல்லை.. இல்லை..
கொஞ்சம் சதைப் போட்டிருந்தாள்
"எப்படி இருக்குறீங்க"
நலம் விசாரித்தவள் பின்பு
ஒழுங்கா நேரத்துக்கு சாட்டுங்க
எதுக்கும் கவலை படாதீங்க
யார் மேலையும் கோப படாதீங்க என்று
தினமும் முன்பு பாடும்
பழைய பல்லவியை பாடினாள்
சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்
நேரம் ஓடிய வேளையில்
விடைபெற கையசைத்தவளை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்
இதோ
இரவாக தொடங்கி விட்டது
நேற்றைப் போல் வந்து விடுவாள்
இன்று இரவும்
காத்திருக்கும் என் கனவுகளில்...
Wednesday, 28 December 2016
காத்திருக்கும் என் கனவுகள்
Sunday, 18 December 2016
உயிர்த் தீ அணையட்டும்
எரிகிறதை பிடுங்கினால்
தானாக அணையுமாம்...
பெண்ணே...
வா...
வந்து பிடுங்கிச்செல்
என் நெஞ்சில் கொழுந்து விட்டெரியும்
உன் நினைவுகளை...
அப்போதாவது அணையட்டும்
என்
"உயிர்த் தீ"
Thursday, 15 December 2016
கல்லறை உறக்கம்
பாவம் உன் நினைவுகள்
என் கல்லறையையேச் சுற்றி சுற்றி வருகிறது
சொல்லிவிடு சகியே அதனிடம்
இனி
இவன் உறக்கம் கலைக்க முடியாதென்று...
Thursday, 1 December 2016
காதலுக்கு கொல்லி வைக்கிறாய்
சாதியிலிருந்தும்
மதத்திலிருந்தும்
அந்தஸ்திலிருந்தும்
இன்னும்
அணையாத பழைய பகையிலிருந்தும்
நெருப்பெடுக்கிறார்கள் அவர்கள்
காலம் காலமாய் வாழும்
காதலுக்கு கொல்லி வைக்க
ஆனால்,
நீயோ..
வார்த்தையில் நெருப்பெடுத்து வீசுகிறாய் என்னில்
"என்னை மறந்து விடுங்கள்" என்று...
Subscribe to:
Comments (Atom)