இரவை உறங்க வைத்து விட்டு
இருவரும் விழித்திருந்த
காதல் காலங்கள் அது..
விடியும் வரை பேசிப் பேசி செலவழித்தும்
குறைந்தப்பாடில்லை அன்றைய இரவுகளில்
நம்மிடம் வார்த்தைகளும் முத்தங்களும்...
அதிகாலை ஐந்திற்கு இரவு வணக்கம் சொல்லியவள்
"டியர் "என்று திரை விடிய செய்வாய்
எனக்கு முன் கண் விழித்து
"தூங்குமூஞ்சி இன்னும் எழ வில்லையா" என்று
எழுத்தின் விசைத்தட்டி என்னில் எறிவாய்
செல்லத் திட்டல்களோடு அடுத்து
கொஞ்சம் கோபத்தோடும் நெஞ்சம் பதைப்போடும்
பதிலில்லா நிமிட இடைவெளியில்
அழைப்பின் விசையை அவசரப் படுத்துவாய்...
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா...?
பாதியில் துண்டிப்பவனை
"எங்க லூசு போயிட்டீங்க?" என்று
அர்ச்சனை செய்து விடிய வைப்பாய்
அன்றெல்லாம் இவன் காலையை..
இப்போதும் உறங்கி கொண்டுதான் இருக்கிறேன்
ஆனால்
ஒருபோதும் வருவதில்லை உன்னிடமிருத்து
கைப்பேசி வழி காதல் மொழிகள்
ஆமாம்
தொடர்பு எல்லைத் தாண்டி உறங்கும்
இவனின் கல்லறை தூக்கத்தை கலைப்பதற்கு...
No comments:
Post a Comment