Monday, 14 September 2015

நன்றி காதலி

அழுவதால் மன அழுத்தம் குறையுமாம்
அழுவதால் கண் பார்வை தெளிவாகுமாம்
கண்ணீர் கண்களை சுத்தமாக்குமாம்
கண்ணீர் கிருமி நாசினியாம்
.
.
.
"நன்றி காதலி"
"உனக்கும் உன் நினைவுகளுக்கும்"

Saturday, 5 September 2015

இது காதலின் கோரப் பசி

அனுதினமும்
என் உறக்கங்களை உணவாக்கி கொள்கிறது
கண்ணீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறது
அப்படியென்ன கோரப் பசியோ தெரியவில்லை
"அவளின் நினைவுகளுக்கு"

Friday, 4 September 2015

உன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறேன்
சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்
படித்துக் கொண்டிருக்கிறேன்
தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறேன்
சமையல் செய்து கொண்டிருக்கின்றேன்
சும்மாதான் இருக்கின்றேன் லூசு சொல்லுங்க

இப்படியாக பதிலுரைப்பாய்
இறுதியில் ஒரு லூசையும் சேர்த்து
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்ற கேள்விகளுக்கு அப்போதெல்லாம்

இப்போது நீ
ம்ம்.. தெரியும்
உன் கணவனோடு பேசிக் கொண்டிருப்பாய்

ஆனால்
நானோ...?
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி
எனக்கென்னவோ ஒரே வேலைதானடி
ஆமாம்
"உன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்"

Tuesday, 1 September 2015

ஆயிரம் ஜென்மங்கள் காத்திருப்பேன்

ஊடல் கலைந்து கூடல் வேளைகளில்

கோபமாடா செல்லம்
என்று நான் கேட்கும் தருணங்களில்

கோபமெல்லாம் இல்லை
என் மீது கொண்ட உங்கள் அன்பு
இப்போது இன்னும் கூடியுள்ளது

இப்படிதான் மொழியுதிர்ப்பாள் அவள்

இப்போது
அவள் ஊடல் கொண்டு செல்கிறாள்

ஊடல்
இது அன்பைக் கூட்டும் கருவிதான்
அதற்க்காக இப்படியாடி செய்வாய்

என்னவளே..!
ஏனடி என் ஆயுள் முழுமைக்கும்
ஊடல் கொண்டு செல்கிறாய்
அடுத்த ஜென்மத்தில் அன்பை பொழியவா?

அடுத்த ஜென்மம் மட்டுமல்ல
ஆயிரம் ஜென்மங்கள் காத்திருப்பேன் நான்
உன் அன்பிற்க்காக...

இரக்கமற்ற அவள் நினைவுகளால்

ஆண்டுக்கொரு முறை மட்டுமல்ல
அனுதினமும் கொண்டாடுகிறேன் நான்
என் இரவின் விழிகளில் சிவராத்திரியை
ஆமாம்
என் உறக்கம் உண்டு உயிர் வாழும்
இரக்கமற்ற "அவள் நினைவுகளால்"