நானிருக்கிறேன் என்றாய்
வார்த்தைகளால் உன்
இதயம் நுழைந்து விட
சொற்கள் தேடுகிறேன்
சொல்லாமல் கொள்ளாமல்
நீ போனது தெரியாமல்
நீ கேட்கிறாய் என்று
நான் பேசிய வார்த்தைகளெல்லாம்
காற்றிலேறி மேகம் முட்டுகிறது
சூல் கொண்ட என் சொற்களோ
உடைந்த மேகமாய் பொழிகிறது
ஊருக்கும் உனக்கும்
மழை என்ற பெயரில்.
No comments:
Post a Comment