Friday, 21 October 2016

உன் நினைவுக் காட்டில் செத்து கிடக்கிறேன்

உனை எண்ணி எண்ணி
எழுதும் கவிதையில்
பிண்ணி பிண்ணிக் கிடக்கிறது
என் உயிரின் வலி

உன் நினைவுகளை
போர்த்திக் கொண்டு
விழித்து கிடக்கிறது
 என் இரவுகள்

என் இரவுகளையும் பகல்களையும்
தின்று செரிக்கும்
உன் நினைவுகளின் பசிக்கு
இன்னும் மிச்சமிருக்கிறது
 என் உயிர்

முன்னுரை முடிவுவரை என
இரண்டையும் நீயே எழுதியவள்
இடைப்பட்ட பக்கங்களை
விட்டுச் சென்றிருக்கிறாய் வெற்றிடமாக
கண்ணீரைத் தவிர வேறென்ன எழுத?
உன் நினைவுகளை வைத்துக் கொண்டு

ஒரு வழியாக ஓடிவிட்டது
உன் நினைவோடு இன்றைய பொழுது.
நாளைய பொழுதும் இப்படித்தான்...

கண்ணு ரெண்டும் ஏன் செவந்திருக்கு?
எல்லோரும் கேட்கிறார்கள்
உறங்கா இரவுகளில்
உன் மருதாணி நினைவுகளை
பூசிக் கொண்ட விழிகளைப் பார்த்து

புரையேறுகிறது, தும்மல் வருகிறது..
யாரோ நினைக்கிறார்களாம்
எத்தனை பொய் இது
ஆமாம் பின்னே .
நினைப்பதற்க்கு நீயே இல்லாத போது

யாரும் தேடவில்லை
நீயும் கூட
உன் நினைவுக் காட்டில்
செத்துக் கிடக்கும் என்னை...
#மணி_அமரன்