Tuesday, 1 December 2015

உயிர்வலி உணர்கிறேன் இன்று

அடிக்கடி ஆட்டிப் படைக்கும் என்னை
அப்படியொரு தலைவலி அன்றெல்லாம்
வலியில் துடிக்கும் என்னிடம்
வந்துரைப்பாள் அவள்
"என் மடியில் படுத்துக் கொள்ளுங்கள்
தலையை பிடித்து விடுகிறேன்" என்று
அவளால்தான் அறிந்தேன்
அன்பின் வார்த்தைகளும் மருந்தாகுமென்று
தாய்மடி சேயாய் அவள்மடி துயில
தலைவலி வரவே தவம் கிடப்பேன் மீண்டும்
ஆனால் இன்றோ
உயிர்வலி உணரும் வார்த்தையொன்றை
உரைத்துப் போகிறாள் அவள்
ஆமாம்
கொஞ்சம் கொஞ்சமாக
"என்னை மறந்து விடுங்கள் என்று"
அவளால்தான் அறிகிறேன் இப்போதும்
அன்பின் வார்த்தைகளும்
ஆளைக் கொல்லும் விஷமாகுமென்று...