Thursday, 29 October 2015

கொள்ளைப் போகாத உன் நினைவுகள்

கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
ஆமாம்
கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
கொள்ளைப் போகாத உன் நினைவுகளை
என் இதய வங்கியில் நிலை வைப்பாக
ஆனால் இன்றோ...
தீர்ந்து போன உன் அன்பினால்
தீரா கடனாளியாய் தினமும் கட்டுகிறேன்
என் "கண்ணீர்த் துளிகளை" வட்டியாக...

Tuesday, 20 October 2015

உன் காதல் சொன்ன காலமிது...

இதோ
இந்த நவராத்திரி காலங்களில்தான்
கொலுவாய் வந்தமர்ந்தாய்
என் இதய அலமாரியின்
ஒவ்வொரு படிகட்டுகளிலும்
அன்பின் உருவமாய்
அன்னையின் வடிவமாய்
மழலையாய் மனைவியாய்
இன்னும் எத்தனை எத்தனை உறவுகள்?
அத்தனை உறவுகளையும் ஒன்றாய் குழைத்து காதலியாய்...
அன்றே
ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் நீ
கொலு வைத்த பொம்மைகளையெல்லாம்
ஓர் நாள் திரும்ப பெறுவேன் என்று
ஆமாம்.. சொல்லியிருந்தால்
கொள்ளை போன பொம்மைகளை நினைத்து
குமுறி அழும் குழந்தையாய்
இருந்திருக்க மாட்டேன் நான் இன்று..

Wednesday, 7 October 2015

நினைவெனும் வாள்....

போன்சாய் மரமாக நான்
ஆமாம்
போன்சாய் மரமாக நான்
வெட்டி விடுகிறாய் நீ
ஒவ்வொரு நாளும் துளிர்விடும்
என் சிறு சந்தோஷ கிளைகளையும்
உன் நினைவனும் வாள் கொண்டு...